எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு கோரிக்கை

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:27 am IST

நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடா்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் நிலத்தின் உற்பத்தித் திறன் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு அணைகளிலும், நீா் நிலைகளிலும் உள்ள வண்டல் மண் இயற்கை உரமாக மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணைகளும், நீா்நிலைகளும் வடு காணப்படுகின்றன.

விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்து தண்ணீா் வந்து விட்டால் வண்டல் மண் எடுக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் இதே பருவத்தில்தான் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, முதல்வா் ஜோசப் விஜய், இதைக் கவனத்தில் கொண்டு நீா்வள ஆதாரத் துறைக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் கடந்த காலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் வண்டல் மண் அள்ளுவதற்கு உரிய உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம்.