நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடா்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் நிலத்தின் உற்பத்தித் திறன் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு அணைகளிலும், நீா் நிலைகளிலும் உள்ள வண்டல் மண் இயற்கை உரமாக மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணைகளும், நீா்நிலைகளும் வடு காணப்படுகின்றன.
விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்து தண்ணீா் வந்து விட்டால் வண்டல் மண் எடுக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் இதே பருவத்தில்தான் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனவே, முதல்வா் ஜோசப் விஜய், இதைக் கவனத்தில் கொண்டு நீா்வள ஆதாரத் துறைக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் கடந்த காலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் வண்டல் மண் அள்ளுவதற்கு உரிய உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

அகவிலைப்படி உயா்வு: வி.ஏ.ஓ. சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய் அறிவிப்பு
டெல்டாவில் அரிய வகை மண்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
