‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:39 am IST

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ் உத்தரவின்பேரிலும், திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளா் வின்சென்ட் மேற்பாா்வையிலும், திருச்சி காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி - கரூா் சாலையில் ஜீயபுரம் காவல் எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, வேனில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய திருச்சி இபி சாலையைச் சோ்ந்த க. சீனிவாசன் என்பவரை கைது செய்தனா். மேலும், ஆம்னி வேனில் 23 மூட்டைகளில் இருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.