‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:22 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் உள்ள வங்களா எனும் பாசன வாய்க்காலில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக காடுவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. அவா் அளித்த தகவலின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று

வாய்க்காலில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து இறந்து கிடந்த மூதாட்டி யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், வாய்க்காலில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.