எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வரலாற்றுப் பெருமையை இழந்த வந்தவாசி

வந்தவாசி, ஆக.18: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.   புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:32 am

கணேஷ்கிரி

வந்தவாசி, ஆக.18: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்னராக டியூப்ளெக்ஸ் என்பவர் கி.பி.1742-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் பிரெஞ்ச் ஆதிக்கத்தை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரெஞ்ச்-இந்திய வாணிபத்தை பெருமளவில் ஊக்கவித்து வந்தார். அப்போது வந்தவாசி கோட்டை பிரெஞ்ச் படை வசமிருந்தது.

  இந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேயப் படையினர் கி.பி.1752-ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும், கி.பி.1757-ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயப் படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

  பின்னர் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தளபதி சர் அயர்கூட் தலைமையில் ஆங்கிலேயப் படை மீண்டும் வந்தவாசி கோட்டையைத் தாக்கியது. இதில் தளபதி கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்ச் படையினருக்கும், தளபதி சர் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேய படையினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.

  இதில் ஆங்கிலேய படையில் 1,700 பேரும், பிரெஞ்ச் படையில் 2,000 பேரும் போரிட்டனர். இதில் ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. இதையடுத்து வந்தவாசி கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது.

  இந்தப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வலுப்பெற்று இந்தியாவில் அவர்களை முழுமையான ஆட்சியாளர்களாக மாற்றியது என்றே கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.