ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காத்திருக்கும் 1,122 பட்டதாரி ஆசிரியர்கள்

வேலூர், ஜூன் 23: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு 3 மாதங்களாகியும், கவுன்சலிங் நடத்தப்படாமல் 1,122 பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை

Updated On :20 செப்டம்பர் 2012, 1:00 pm

வேலூர், ஜூன் 23: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு 3 மாதங்களாகியும், கவுன்சலிங் நடத்தப்படாமல் 1,122 பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில், சுமார் 6,000 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களது சான்றிதழ்கள் 2009 நவம்பர் 2-ம் தேதி சரிபார்க்கப்பட்டன. அதன்பின், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் டிசம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டது.

 பின்னர், இவர்களில் தேர்வு செய்யப்ட்ட 1,122 பேர் பட்டியல் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஏப்ரல் 3-ம் தேதி சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது.

 ஆனால், மூன்று மாதங்களாகியும் தற்போது வரை இவர்களுக்குக் கவுன்சலிங் நடத்தப்படாமல் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், பணியிட உத்தரவு கைக்கு கிடைக்கவில்லை.

 ஆசிரியர் பணிக்கான தேர்வுக் கடிதம் கிடைத்ததும், ஏற்கெனவே பணிபுரிந்து வந்த இடத்திலிருந்து வேலைகளை விட்டுள்ளனர். வரும் ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் பணியாற்ற உத்தரவு கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த இவர்களுக்கு தற்போதுவரை கவுன்சலிங் நடத்துவதற்கான அழைப்புக் கடிதம் வரவில்லை. ஆனால், புதிதாக 6,400 பேருக்கு கடந்த மே 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்துள்ளது. மேலும், புதிதாக 8 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

 தேர்வு செய்யப்பட்ட 1,122 பேரில் பலர் 50 முதல் 56 வயதுக்குள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கவுன்சலிங் நடத்துவதற்கு முன்னரே இவர்களில் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

 இந் நிலையில் இவர்கள் அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.