எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அவலநிலையில் வந்தவாசி பஸ் நிலையம்

வந்தவாசி, நவ.10: வந்தவாசி பஸ் நிலையத்தில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.   பஸ் நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:11 pm

கணேஷ்கிரி

வந்தவாசி, நவ.10: வந்தவாசி பஸ் நிலையத்தில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

  பஸ் நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் 10 பஸ் நிறுத்தும் இடங்களும், 20-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.

  வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். வந்தவாசியை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து பிற ஊர்களுக்கு செல்கின்றனர்.

  சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வந்துதான் செல்ல வேண்டும்.

  இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் தொட்டி ஒன்று இந்த பஸ் நிலையத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பின்றியும், பயன்பாடின்றியும்

உள்ளது.

  பஸ் நிலையத்தினுள் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

மற்றொன்று சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

  பஸ் நிலையத்தினுள் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பஸ் நிலையத்தை பராமரிக்கும் நகராட்சி உடனடியாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்பதே வந்தவாசி நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.