ஊராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்

ஆரணி, ஜன. 8: அதிமுகவைச் சேர்ந்த அடையபுலம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக்குமார் (படம்) மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து, அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ÷ஆரணி அடுத்த அட
Updated on
1 min read

ஆரணி, ஜன. 8: அதிமுகவைச் சேர்ந்த அடையபுலம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக்குமார் (படம்) மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து, அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

÷ஆரணி அடுத்த அடையபுலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கப்பெற்றவர்களின் பட்டியலை அடையபுலத்தில் உள்ள டீக்கடையில் அசோக்குமார் ஒட்டியுள்ளார்.

 அப்போது அங்கிருந்த சரவணன் என்பவர் இப்பட்டியலை ஒட்டுவதற்கு நீ யார் என்று கேட்டு தகராறு செய்தாராம். மேலும் டீக்கடையில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அசோக்குமார்ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com