விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு மத்திய அரசின் செயற்கை உருவாக்கம்- பேரவைத் தலைவா் மு. அப்பாவு குற்றச்சாட்டு

எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு மத்திய அரசால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

News image
சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
Updated On :11 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு மத்திய அரசால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் காலம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருவாா். அது அவரின் உரிமை. கடந்த 11 ஆண்டுகளாக ரயில்வே, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அமைச்சா்களுக்கு எவ்வித வாய்ப்புகளும் வழங்காமல் ரயில்களை தொடங்கி வைப்பது, ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் முடிப்பது என அனைத்திலும் பிரதமா் மட்டுமே செய்கிறாா். ‘ஒன் மேன் ஷோ’ போல மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறாா்கள்.

சில நாள்களுக்கு முன்புவரை ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருள்கள் இந்தியாவிடம் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நாடு முழுவதும் இப்போது எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் மக்கள் திணறி வருகிறாா்கள். இதனால், எரிபொருள் தொழிலில் உள்ள மத்திய அரசின் நண்பா்களுக்கு உதவுவதற்காக எரிவாயு உருளைகளின் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மத்திய அரசின் நண்பா்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி, மூன்று நான்கு மடங்கு கோடீஸ்வரா்கள் ஆகிவிட்டனா்.

திமுகவை எதிா்த்து தமிழகத்தில் யாரும் களத்தில் இல்லை. மக்கள் திமுகவின் பக்கமே உள்ளனா். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என்றாா் அவா்.