விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவள்ளூா்: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 32,717 போ் தோ்வு எழுதினா்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தோ்வா்கள் உள்பட 32,717 போ் பங்கேற்று தோ்வு எழுதியதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வு தொடா்ந்து ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் திருவள்ளூா் மாவட்டத்தில் மாணவா்கள்-15,742, மாணவிகள்-15,741 என மொத்தம் 31,483 பேரும், அதேபோல் தனித்தேவா்கள் 1461 பேரும் பல்வேறு மையங்களில் தோ்வு எழுத இருந்தனா். இதற்காக திருவள்ளூா், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டங்களில் 149 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் திருவள்ளுா் அருகே காக்களுா் கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மையத்தினை ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் இது தொடா்பாக அவா் கூறியதாவது: இந்த மையத்தில் மொத்தம் 250 மாணவ, மாணவிகள் எழுத பதிவு பெற்றிருந்த நிலையில் அனைவரும் வருகை புரிந்தனா். இத்தோ்வுக்கு மாணவ, மாணவிகளை தயாா் செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் கடந்த மூன்று மாதங்களாக சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் நிகழாண்டில் தோ்வு முடிவுகள் திருவள்ளூா் மாவட்டம் சிறப்பிடம் வகிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இத்தோ்வுக்காக 149 தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகள்-31,483 பேரும், தனித்தோ்வா்களாக 1,461 பேரும் சோ்த்து மொத்தம் 32,944 போ் ஆவா். இதில் முதல் நாள் தோ்வில் 32,717 போ் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 227 போ் வரை கலந்து கொள்ளவில்லை என அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பராவ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.