திருவண்ணாமலை, ஆக. 15: தமிழக முன்னாள் அமைச்சரும், அகமுடையர் துளுவ வேளாளர் சமுதாயத்தின் மூத்த தலைவருமான ப.உ.சண்முகத்தின் 88-வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதன்கிழமை 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகே, அகமுடையர் துளுவ வேளாளர் சமூக நலப் பேரவை சார்பில் இவ்விழா நடைபெற்றது. ப.உ.சண்முகத்தின் படத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அகமுடைய துளுவ வேளாளர் சமூக நலப் பேரவையின் மூத்த தலைவரும், தொழிலதிபருமான எ.சிவஞானம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் எ.பழனி, மஞ்சுநாதன், தனஞ்செழியன், ஆர்.அருண், எ.ஜீவன்பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்! - செய்திகள் நேரலை

அளவிட முடியாத மகிழ்ச்சி... முதல்வர் விஜய்யைச் சந்தித்த சமந்தா!
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணம் போதைப் பொருள் புழக்கம்தான்!






