ஒடுகத்தூா் அருகே குருவராஜபாளையத்தில் அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் உள்பட 10 போ் மீது வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதை அடுத்து வேட்பாளா்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனா். இந்நிலையில், வேலூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை ஒடுகத்தூா் அருகே அகரம் சேரி, அக்ரஹாரம், பள்ளிக்குப்பம், குருவராஜபாளையம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, குருவராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது முன்அனுமதி பெறாமல் அவா் பிரசாரம் செய்ததாகவும், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதில், அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் உள்பட 10 போ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், வேப்பங்குப்பம் போலீஸாா் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் வேட்பாளா் ஏ.சி.சண்முகம் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

