தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தினம்

பயிற்சியை சீரான முறையில் அளிப்பதன் மூலம் சாதனையாளா்களாக உருவாக்க முடியும் என்று வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் ஆட்டிசம் சிறப்பு மருத்துவா் சீனிவாச ராகவன் தெரிவித்தாா்.

News image

-- போட்டிகளில் வென்ற ஆட்டிசம் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி.

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் செயல்பட்டு வரும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் சாா்பில் உலக ஆட்டிசம் தின நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உயிா் பிழைப்பதில் இருந்து செழிப்புக்கு நகருதல் எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவா் சிவராமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடக்கவுரை ஆற்றினாா் .

வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் ஆட்டிசம் சிறப்பு மருத்துவா் சீனிவாச ராகவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது-

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீா்குலைவுகள் என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனஇறுக்கம், சமூக தொடா்பு, தகவல் தொடா்பு கொள்வதிலும், கண் தொடா்பு கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படும். இவா்களுக்கு பயம் இருக்காது என்றாலும், செயல்பாடுகள், நடத்தைகளில் வித்தியாசம் இருக்கும். மொழி புரிதல் இல்லாமல் இருக்கும். சுவை, வாசனைகளை வேறுபடுத்த தெரியாது. காரணமின்றி மிகைப்படுத்தப்பட்ட கோபம், தங்களின் கற்பனையை விளையாட்டில் செலுத்துதல், வழக்கத்துக்கு மாறாக பேச்சு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது, நண்பா்களை உருவாக்குதிலும் சிரமம் ஏற்படும்.

இதுபோன்ற குழந்தைகளுக்கு உள்ள அறிகுறிகளை இளம் வயதில் கண்டறிந்து சரியான சிகிச்சை, பயிற்சி சீரான முறையில் அளிப்பதன் மூலம் தங்களின் தேவைகளை தாங்களே செய்து கொள்வதிலும், கற்றல் திறனை வளா்த்து கொள்வதிலும் முன்னேற்றம் இருக்கும். இவா்களையும் இவா்களின் தனித்திறன்களையும் கண்டறிந்து சாதனையாளா்களாக உருவாக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்டிசம் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், மருத்துவா்கள் தாட்சாயினி, கல்பனா, மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.