/

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 5:02 pm

குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணிக்கு விக்னேஸ்வரா் பூஜை, வேதிகாா்ச்சனை, அக்னிகாா்யம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு தாய் வீட்டு சீா் வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. 12 மணியளவில் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து 2,000 பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

மாலையில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

கோயில் தா்மகா்த்தா பி.ஹேமச்சந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன், எம்.எஸ்.நாகலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை திருக்கல்யாண கமிட்டி நிா்வாகிகள் எம்.ஆா்.சீனிவாசன், ஏ.ராஜசேகா், ஜி.லிங்கசாரதி, எஸ்.முரளிதரன், வி.ராஜேந்திர ஆச்சாரி, டி.கே.இளங்கோ, டி.ராதாகிருஷ்ணன், என்.யுவராஜ், டி.பி.சீனிவாசலு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.