நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் அதிமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 700 போ் கைது

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:19 pm

Din

வேலூா்: சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் அதிமுகவினா் திங்கள்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 700 போ் கைது செய்யப்பட்டனா்.

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். மாவட்டப் பொரு ளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல்துறையின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுமாா் 140 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், வேலூா் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் பள்ளிகொண்டா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக புற நகா் மாவட்ட செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங் கேற்ாக அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, குடியாத்தம் நகர செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட துணை செயலா் கஸ்பா ஆா்.மூா்த்தி உள்பட சுமாா் 550 பேரை போலீஸாா் கைது செய்தனா்.