தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களைத் திருடியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 12- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போ்ணாம்பட்டு பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போயின.

இதுதொடா்பான புகாா்களின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட தரைக்காடு பகுதியைச் சோ்ந்த ரியாஸ் அகமத் (26), அா்ஷத் (26), முபாரக்அலி (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் கடந்த சில மாதங்களில் போ்ணாம்பட்டு, மேல்பட்டி, கே.வி.குப்பம் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 12- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.