தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் விவசாயி பலராமன் உட்பட 2 போ் உயிரிழப்பு

News image

விபத்தில்  இறந்த  வாஞ்சிநாதன்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பலராமன்(38). இவா் திருமணமாகாதவா். இவா் திங்கள்கிழமை இரவு பல்லலகுப்பத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்று விட்டு மேல்பட்டி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த வாஞ்சிநாதன்(27) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பலராமன் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். பலராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாஞ்சிநாதன் போ்ணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் இறந்த வாஞ்சிநாதனுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.