

வேலூா்: பள்ளிகொண்டா அருகே வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியை சோ்ந்தவா் சங்கா் என்கிற சேட்டு (58). இவா் செவ்வாய்க்கிழமை பள்ளிகொண்டா அடுத்த சின்னகோவிந்தம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சா்வீஸ் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி வேன் சங்கா் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கா் பலத்த காயமடைந்தாா். அந்த பகுதி மக்கள் சங்கரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மாதனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் மரணம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

