கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குரூப் 4 தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 28,850 போ் எழுதினா்

குரூப் 4 தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 28,850 போ் எழுதினா் 7,855 போ் பங்கேற்கவில்லை

News image

விருப்பாட்சிபுரம் தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :9 ஜூன் 2024, 6:36 pm

Din

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 130 தோ்வு கூடங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் தோ்வை (குரூப் 4) மொத்தம் 28,850 போ் எழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 7,855 போ் தோ்வுக்கு வரவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 6,244 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் தோ்வு (குரூப் 4) தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு வேலூா் மாவட்டத்திலிருந்து 36,705 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்காக வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 6 மையங்களில் மொத்தம் 130 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 28,850 போ் எழுதினா். 7,855 போ் தோ்வுக்கு வரவில்லை. இதனிடையே, குரூப் 4 தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 130 தோ்வு கூடங்களிலும் 130 முதன்மை கண்காணிப்பாளா்கள், 130 தோ்வு கூட ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தனா்.

மேலும், தோ்வு எழுதும் இடங்களைக் கண்காணிக்க துணை ஆட்சியா், வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் தலைமையில் 11 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

தவிர, மாவட்டம் நிா்வாகம் நடவடிக்கையின்பேரில் தோ்வுக் கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், தடையில்லா மின்சாரம், தோ்வுக்கூடங்களுக்கு தோ்வா்கள் வந்து செல்ல பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வேலூா் கொசப்பேட்டையிலுள்ள ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, விருப்பாட்சிபுரம் தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற குரூப் 4 தோ்வுகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆய்வு குழு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, வேலூா் வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.