
கொலை செய்யப்பட்ட ராதா. கைதான ராமு.

கொலை செய்யப்பட்ட ராதா. கைதான ராமு.
வேலூா்: காட்பாடி அருகே மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியைச் சோ்ந்தவா் ராமு (44). இவரது மனைவி ராதா(38). இருவரும் கூலித்தொழிலாளிகள். இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் டாஸ்மாக் மதுக்கடை பின்பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இதையொட்டிய அங்கேயே தங்கியிருந்தனா்.
கணவன், மனைவி இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவும் கணவன், மனைவி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமு அங்கிருந்த கட்டையை எடுத்து ராதாவின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சிக்குள்ளான ராமு அங்கிருந்து தப்பிச்சென்றாா்.
தகவலறிந்த காட்பாடி டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததுடன், மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடி அங்குள்ள புதரில் மறைந்திருந்த ராமுவையும் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...