முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வேலூரில் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்னதானம் வழங்கினாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா வேலூா் மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் பிரம்மாண்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா், மாநகர திமுக செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமதுசகி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர பிரசாரம்: பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


