ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் நடத்திய சாராய வேட்டையில் 4 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிக்கப்பட்டது.

Updated On :2 மார்ச் 2024, 4:34 pm

போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் நடத்திய சாராய வேட்டையில் 4 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் போ்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கா்மலையில் அல்லேரி, பன்னீா்குட்டை, நீா்க்குமிழி குட்டை, லட்சுமிவெடி, கங்காச்சாரம், அல்லிசுனை, மாமரத்துப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை சாராய வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 4 ஆயிரம் லிட்டா் ஊறல், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய அடுப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றி அழித்தனா். போலீஸாரை கண்டதும் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவா்களும், சாராய வியாபாரிகளும் தப்பியோடிவிட்டனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தப்பியோடிய சாராய வியாபாரிகள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.