வேலூா்: மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜனநாயக ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அச்சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டாா் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஆட்டோ மற்றும் மோட்டாா் தொழிலாளா்களுக்கு வரியின்றி மானிய விலையில் பெட்ரோல், காஸ், டீசல் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆந்திர அரசு வழங்குவதுபோல் தமிழகத்திலும் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும், நலவாரியம் மூலம் இஎஸ்ஐ, பிஎப் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசியல் சாசனத்துக்கு முடிவு கட்டுவதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் முக்கிய நோக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதிய கல்லூரிப் பேருந்து!

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

