நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் காட்பாடி ரயில்வே போலீஸாா், சேலம் கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:03 am IST

கேரள மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்துவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பீகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது. அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா, சேலம் கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பொதுப்பெட்டியின் கழிவறை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கிடந்த பைகளை எடுத்து சோதனை செய்தனா். அவற்றில் 2 பண்டல்களில் ஐந்தரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.