கேரள மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்துவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பீகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது. அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா, சேலம் கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பொதுப்பெட்டியின் கழிவறை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கிடந்த பைகளை எடுத்து சோதனை செய்தனா். அவற்றில் 2 பண்டல்களில் ஐந்தரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

