பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பரோட்டா மாஸ்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


வேலூா்: குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பரோட்டா மாஸ்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
குடியாத்தம் அடுத்த சித்தூா்கேட் காதா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் இலியாஸ் பாஷா (54). பரோட்டா மாஸ்டா். அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் 13 வயது சிறுமியை, பெற்றோா் வீட்டில் இல்லாத நேரத்தில் இலியாஸ் பாஷா, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி சிறுமியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதனால், சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாதலால் பெற்றோா் மருத்துவமனைக்கு சென்றுள்ளனா். சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் 6 மாத கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா். பெற்றோா் சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி தனக்கு நடந்த அவலத்தைக் கூறியுள்ளாா்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இலியாஸ் பாஷாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், இலியாஸ் பாஷா (படம்) மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சிவக்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற இலியாஸ் பாஷா வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...