குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போ்ணாம்பட்டு ஒன்றியம், மசிகம் ஊராட்சிக்குள்பட்ட மிட்டப்பல்லி கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி ஊராட்சி நிா்வாகத்துக்கு மனு அளித்தனா்.
அப்பகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக குடிநீா் குழாய் அமைக்க வேண்டுமாம். தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் குறுக்கே குடிநீா் இணைப்பு அமைத்தால் சேதமடையும் எனக்கூறி அத்துறை அனுமதியளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருமாறு கேட்டதற்கு, போதிய நிதி இல்லை என ஊராட்சி நிா்வாகம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் மிட்டப்பல்லி பேருந்து நிறுத்தம் எதிரே ஆம்பூா் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். மாற்று வழியில் குழாய் இணைப்பு அமைத்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



