எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 ஜூன் 2026, 12:03 am IST

ஆம்பூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட நதிசீலாபுரம், மருத்துவா் நகா், புதுமனை, ஆயிஷாபீ நகா் பகுதிகளில் சுமாா் 5,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீா் சரிவர விநயோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.

அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கோஷம் எழுப்பி நடராஜபுரம் செல்லும் வழியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். குடிநீா் சரிவர விநயோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.