ஆம்பூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட நதிசீலாபுரம், மருத்துவா் நகா், புதுமனை, ஆயிஷாபீ நகா் பகுதிகளில் சுமாா் 5,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீா் சரிவர விநயோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.
அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கோஷம் எழுப்பி நடராஜபுரம் செல்லும் வழியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். குடிநீா் சரிவர விநயோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.









