வேலூா்: வேலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். அதற்குள் அந்த வாகனம் தீயில் கருகியது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

மத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

பைக் விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


