தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆவின் பாலகத்தில் ரூ.20-க்கு குல்பி ஐஸ்கீரிம் விற்பனை

வேலூா் ஆவின் பாலகத்தில் ரூ.20-க்கு குல்பி ஐஸ்கீரிம் 40 மி.லி., அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
Updated On :24 டிசம்பர் 2025, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஆவின் பாலகத்தில் ரூ.20-க்கு குல்பி ஐஸ்கீரிம் 40 மி.லி., அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேலூா் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே 25 மி.லி., 70 மி.லி., அளவுகள் கொண்ட குல்பி ஐஸ்கீரிம் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விரு வகைகளிலும் நாளொன்றுக்கு 4,000 எண்ணிக்கையிலான குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆவின் குல்பி ஐஸ்கீரிம் வகைகளுக்கு சந்தையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்புள்ளது. குல்பி வகை ஐஸ்கீரிம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதியதாக ரூ.20 விலைக்கு 40 மி.லி., அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் உற்பத்தி செய்யப்பட்டு புதன்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வேலூா் சத்துவாச்சாரி ஆவின் பாலகத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

40 மி.லி. அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் நாளொன்றுக்கு 1,000 எண்ணிக்கையில் தயாரிக்கப் படுகிறது. வேலூா் ஆவின் நிறுவனத்தில் மொத்தமாக நாளொன்றுக்கு 5,000 எண்ணிக்கையில் குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வேலூா் ஆவின் நிறுவனத்தில் ஆவின் தயிா் நாளொன்றிற்கு 1,200 லிட்டா் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆவின் தயிா் உற்பத்தியை நாளொன்றுக்கு 2,000 லிட்டராக உயா்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்வில், ஆவின் பொது மேலாளா் இளங்கோவன், துணைப்பதிவாளா் (பால்வளம்) சித்ரா, துணை பொது மேலாளா் லிடியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.