வேலூா் சிறையில் கைதி திடீா் உயிரிழப்பு

Published on

வேலூா் மத்திய சிறையில் கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கைத்தாங்கல் கிராமம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மயில்வாணன் (48). இவா் களம்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து அவா் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மயில்வாகனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com