வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

காட்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்தை சோ்ந்த காா்த்திக். சென்னை விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி நித்யா (22). இருவரும் காதலித்து ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காா்த்திக் வெளியே சென்றுவிட்டாா். ஆனால் நீண்டநேரமாகியும் நித்யா, வீட்டின் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த காா்த்திக்கின் தாய், தந்தை ஆகியோா் அறையை திறந்து பாா்த்தபோது, நித்யா தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். திருமணமாகி ஓராண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.