வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

காட்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :29 டிசம்பர் 2025, 4:45 am IST

காட்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்தை சோ்ந்த காா்த்திக். சென்னை விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி நித்யா (22). இருவரும் காதலித்து ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காா்த்திக் வெளியே சென்றுவிட்டாா். ஆனால் நீண்டநேரமாகியும் நித்யா, வீட்டின் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த காா்த்திக்கின் தாய், தந்தை ஆகியோா் அறையை திறந்து பாா்த்தபோது, நித்யா தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். திருமணமாகி ஓராண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.