ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருப்பாவை பயின்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

‘திருப்பாவை கற்போம் வாரீா்’ பயிற்சியை முடித்த 108 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image

திருப்பாவை பயின்று சான்றிதழ் பெற்றோா்.

Updated On :13 ஜனவரி 2025, 8:28 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் ஆசிரியா் காலனி, பாண்டியன் நகரில் இயங்கும் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில் 8 நாள்கள் நடைபெற்ற ‘திருப்பாவை கற்போம் வாரீா்’ பயிற்சியை முடித்த 108 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மகாரண்யம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவரும் மாா்கழி மாதம் தொடக்க நாள் முதல் அதிகாலை திருப்பாவை, திருவெம்பாவை பாடி வீதி உலா சென்றனா். ஏற்பாடுகளை குடியாத்தம் நாமத்வாா் பிராா்த்தனை மைய நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.