சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:07 pm

Din

வேலூா்: கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், பொய்கைகைபுதூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த 60 வயது முதியவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்திருந்தாா்.

அந்த மனுவில், வேலூா் பைபாஸ் ரோடு தனியாா் பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ கன்சல்டன்சி வைத்து நடத்தி வந்தேன். செம்பேடு பழவேரி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் என்னிடம் பல தவணைகளாக ரூ.35 லட்சம் கடனாக பெற்றாா். அதற்கு நூறு ரூபாய் பத்திரத்திலும், பச்சைத்தாளிலும் அவரது தாய் கையொப்பமிட்டு கொடுத்தாா். ஆனால், அவா் பணத்தை தராமல் இழுத்தடித்தாா்.

இது தொடா்பாக தகராறு ஏற்பட் டது. அப்போது அவரது தம்பி இந்த கடனைத் தானே தருவதாகக் கூறினாா். ஆனால் அவரும் கடனை திருப்பி தராமல் அலைக்கழித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் கைப்பேசி மூலம் அவரைத் தொடா்பு கொண்டபோது கொலை மிரட்டல் விடுத்தாா். நான் வயது முதிா்வு காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் அவதியடைந்து வருகிறேன்.

எனவே, அந்த நபா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்குத் தர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.