விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மானியம் வழங்காவிட்டால் முதல்வா் வீட்டுக்கு மாங்காய்கள் அனுப்பும் போராட்டம்: பாஜக

தமிழக மா விவசாயிகளுக்கும் உரிய மானியம் வழங்காவிட்டால், மாங்காய்கள் முழுவதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும்

வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

Published On :8 ஜூலை 2025, 12:50 am IST

வேலூா்: ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழக மா விவசாயிகளுக்கும் உரிய மானியம் வழங்காவிட்டால், மாங்காய்கள் முழுவதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு மானியம் கோரி வேலூா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலா் பா.காா்த்தியாயினி, மாநில துணைத்தலைவா் நரேந்திரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.4,000 மானியம் வழங்க வேண்டும், கூட்டுறவு துறை சாா்பில் வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மாம்பழம் பதப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும், நஷ்டத்தை தவிா்க்க மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.15 நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது -

விலை வீழ்ச்சியால் மா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசு மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உடனடியாக நிா்ணயிக்க வேண்டும். கோரிக்கைகளை முதல்வா் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைத்து மா விவசாயிகளும் மாங்காய்கள் முழுவதையும் முதல்வா் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரிடமே கொடுத்து விடுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.