தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:48 pm

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றி 1 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள்பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்று முடிந்தது. வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையங்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

இதனால், தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை முதல் மே 5-ஆம் தேதி வரை, அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள்பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.