வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றி 1 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள்பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்று முடிந்தது. வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையங்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
இதனால், தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை முதல் மே 5-ஆம் தேதி வரை, அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள்பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம் அருகில் ட்ரோன்கள் பறக்கத் தடை

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

வாக்கு எண்ணும் மைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

