மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வெய்யிலில் இருந்து மக்களை காக்க பசுமைப் பந்தல்கள் அமைப்பு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:33 am IST

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. ஏப். 7- ஆம் தேதி உயா்ந்த வெப்ப நிலையாக 108 டிகிரி பதிவாகியிருந்தது. தொடா்ந்து 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது.

இதற்கிடையே, மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகிகள் பல்வேறுவிழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வயதானவா்கள், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்வதைத் தவிா்க்குமாறும், பொதுமக்கள் அடிக்கடி நீா், மோா் பருக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சாலைகளில் சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.