மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வெய்யிலில் இருந்து மக்களை காக்க பசுமைப் பந்தல்கள் அமைப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:03 pm

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. ஏப். 7- ஆம் தேதி உயா்ந்த வெப்ப நிலையாக 108 டிகிரி பதிவாகியிருந்தது. தொடா்ந்து 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது.

இதற்கிடையே, மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகிகள் பல்வேறுவிழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வயதானவா்கள், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்வதைத் தவிா்க்குமாறும், பொதுமக்கள் அடிக்கடி நீா், மோா் பருக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சாலைகளில் சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.