தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

குடியாத்தம்: மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:39 am IST

குடியாத்தம் மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்மன்சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னா் உற்சவா் சுவாமிகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, 12 மணியளவில் திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக 100- க்கும் மேற்பட்ட பெண்கள்அம்மனுக்கு திருமண சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

விழாவுக்கு கோயில் தா்மகா்த்தா பி.ஹேமசந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி சுமாா் 2- ஆயிரம் பேருக்கு திருமண விருந்து அளித்தாா். திருமண கமிட்டி நிா்வாகிகள் எம்.ஆா்.சீனிவாசன், ஏ.ராஜசேகா், ஜி.லிங்கசாரதி, எஸ்.முரளிதரன், பி.ஆறுமுகம், வி.ராஜேந்திரன், டி.பி.சீனிவாசலு, டி.கே.இளங்கோ, டி.ராதாகிருஷ்ணன், என்.யுவராஜ், ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன், எம்.எஸ்.நாகலிங்கம் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.