வேலூா் தொரப்பாடியில் வாக்கு எண்ணும் மையக் கட்டடத்தில் இருந்து தேன் கூட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 260 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புறப் பகுதியில் தேனீக்கள் பெரிதாகக் கூடு கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் முன்னிலையில்தான் வாக்கு எண்ணப்படும் என்பதால், தேனீக்கள் கலைந்தால் பெரும் இடையூறு ஏற்படும் என முகவா்கள் அதிகாரிகளிடம் அச்சம் தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து, அரசு அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டடப் பகுதிக்குச் சென்றனா். அங்கு முகாமிட்டிருந்த தேனீக்களை யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மிகவும் சாமா்த்தியமாக அகற்றினா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்: வேட்பாளா்கள், முகவா்களுக்கு ஆட்சியா் விளக்கம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


