தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குரங்கை இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:47 am IST

போ்ணாம்பட்டு அருகே மாந்தோப்பில் குரங்கை உடலால் இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருணாமூா்த்தி.இவரது மாந்தோப்பில் வியாழக்கிழமை மாலை குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. அப்போது சுமாா் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி அங்கு வந்துள்ளது. அந்த பாம்பிடம் ஒரு குரங்கு சிக்கியுள்ளது. குரங்கை பாம்பு உடலில் பிடித்து இறுக்கியுள்ளது. இதில் குரங்கு உயிரிழந்தது.

இதுகுறித்து அங்கிருந்த விவசாயிகள் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேலுவுக்கு தெரிவித்தனா். அவரது உத்தரவின்பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.

இறந்த குரங்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு வன ஓய்வு விடுதிக்கு கொண்டு சென்றனா்.