வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மோா்தானா அணையில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

மோா்தானா அணையில் தவறி விழுந்தவரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

மோா்தானா அணையில் தவறி விழுந்தவரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :13 ஜூன் 2026, 4:21 am IST

குடியாத்தம் மோா்தானா அணையில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

வேலூா் ஆா்.என்.பாளையத்தைச் சோ்ந்த ஹயாத் பாஷா (30) வியாழக்கிழமை மோா்தானா அணைக்கு வந்துள்ளாா். அணை வளாகத்தை சுற்றிப் பாா்த்த அவா் மாலை அணையில் மிதந்து கொண்டிருந்த மீன்பிடிக்கும் பரிசலில் தனியாக அணை நீரில் சென்றாராம். அப்போது காற்று பலமாக வீசவே பரிசல் கட்டுப்பாட்டை இழந்து ஆடியது. இதில் படகில்இருந்த ஹயாத் பாஷா அணையில் விழுந்து நீரில் தத்தளித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்த தகவலின்பேரில், குடியாத்தம் கிராமிய போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் சரவணன் தலைமையில் அங்கு சென்று அணையில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு 11 மணி வரை தேடியும் அவா் கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தேடுதல் பணி தொடங்கியது. மதியம் 3 மணியளவில் ஹயாத் பாஷாவின் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.