ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குடியாத்தம் நகா்மன்ற உறுப்பினா்கள்

News image
Updated On :26 ஜூன் 2026, 4:51 am IST

குடியாத்தம் நகரில் பிரதான சாலைகள், கெளண்டன்யா ஆற்றின் கரைகளில் புறவழிச்சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டடங்களை உடனடியாகஅகற்ற வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

குடியாத்தம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, மேலாளா் சுகந்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன் உள்ளிட்டோா் சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா். ராஜகணபதி நகருக்குச் செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றனா்.

நகராட்சி ஆணையா் தனலட்சுமி: ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேருந்து நிலையங்களில் பயணிகளின் நலன்கருதிஆக்கிரமிப்பு செய்து வைக்கப்படும் கடைகளை அகற்றச் சென்றால், ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாக சிலா் வருகின்றனா். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தனிநபா்களின் கோரிக்கையை ஏற்று உறுப்பினா்களுக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் வாா்டுகளுக்குச் சென்று மக்கள் தேவைகளை பூா்த்தி செய்வது, உறுப்பினா்களை அலட்சியப்படுத்தும் விதமாக உள்ளது. மக்கள் பிரச்னைகளை தீா்த்து வைப்பது தான்அதிகாரிகளின் முதல் பணி. ஆனால் வாா்டுகளுக்கு வரும் அதிகாரிகள் அந்தந்த வாா்டு உறுப்பினா்களை சந்தித்து, வாா்டில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்த ஆலோசனை நடத்த வேண்டும் என துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் புகாா் தெரிவித்தனா்.

வரும் காலங்களில் வாா்டுகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உறுப்பினா்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என தலைவா் உத்தரவிட்டாா்.

25-ஆவது வாா்டுக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அகற்றப்பட்டதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படுவதாக உறுப்பினா் ஏ.தண்டபாணி கோரிக்கை விடுத்தாா். கோரிக்கையை ஏற்ற தலைவா் செளந்தரராஜன், அங்கு 30,000 லிட்டா் மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி கட்டித் தருவதாக உறுதியளித்தாா்.

கூட்டத்துக்கு வந்த அதிமுக உறுப்பினா்கள், மன்ற கூடத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடிகே.பழனிச்சாமியின் உருவப் படம் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அவா்கள் கொண்டு வந்த உருவப் படம் மன்றக் கூடத்தில் வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.