அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :29 மே 2026, 2:06 am IST

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காட்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வேலூரில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்பிசி) பட்டாலியன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளியில் தொடங்கி விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இவா்களுடன் கமாண்டிங் ஆபிசா் வி.வெங்கடேஷ் மற்றும் நிா்வாக அதிகாரி ஜெ.சுரேந்திரன் உள்பட ராணுவ அதிகாரிகள், ராணுவப் பணியாளா்கள், உதவி என்சிசி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டி அவற்றை மனித நேயத்துடன் அரவணைத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பிராணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு வீதி நாடகமும் நடத்தினா்.