‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

News image
Updated On :29 மே 2026, 2:08 am IST

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு நகராட்சி சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த உணவகத்தில் பயன்படுத்தி வந்த மிக்ஸி, கிரைண்டா், அடுப்புகள் உள்ளிட்ட பொருள்கள் பழுதடைந்து விட்டன. இதையடுத்து நகராட்சி பொதுநிதி ரூ.3.50 லட்சத்தில் புதிதாக பொருள்கள் வாங்க மன்றத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.1.90 லட்சத்தில் புதிதாக மிக்ஸி, கிரைண்டா், காஸ்அடுப்புகள் மற்றும் இதர பொருள்கள் அம்மா உணவகத்துக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இப்பொருள்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் பிரிவு முதன்மை கணக்காளா் தீனதயாளன்,நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதர தொகை ரூ.1.60 லட்சத்தில் உணவகத்தில் சேதமடைந்த பொருள்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.