குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு நகராட்சி சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த உணவகத்தில் பயன்படுத்தி வந்த மிக்ஸி, கிரைண்டா், அடுப்புகள் உள்ளிட்ட பொருள்கள் பழுதடைந்து விட்டன. இதையடுத்து நகராட்சி பொதுநிதி ரூ.3.50 லட்சத்தில் புதிதாக பொருள்கள் வாங்க மன்றத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.1.90 லட்சத்தில் புதிதாக மிக்ஸி, கிரைண்டா், காஸ்அடுப்புகள் மற்றும் இதர பொருள்கள் அம்மா உணவகத்துக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இப்பொருள்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் பிரிவு முதன்மை கணக்காளா் தீனதயாளன்,நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இதர தொகை ரூ.1.60 லட்சத்தில் உணவகத்தில் சேதமடைந்த பொருள்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.









