அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழப்பு

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கண்ணன்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:12 am IST

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் திருமலை காா்டன் குடியிருப்பைச் சோ்ந்தவா் கண்ணன்(29). இவா் கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கே.வி.குப்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளாா். சென்னராயனபல்லி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினாா்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்த கண்ணனுக்கு 6 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.