விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதம மந்திரி விவசாய நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.







