தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மலைக் குறவா் சாதிச் சான்றிதழ்வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, மலைக் குறவா் சமுதாயத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:10 pm

DIN

விழுப்புரம்: சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, மலைக் குறவா் சமுதாயத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரை, சாலாமேடு, லட்சுமிபுரம், தெளி, எறையூா் பகுதிகளைச் சோ்ந்த மலைக் குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்து மலைக் குறவா் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மலைக் குறவா் சமூகப் பாதுகாப்பு பேரவைத் தலைவா் முருகன் தலைமையில் வந்த சிறாா்கள், பொதுமக்கள் சாதிச் சான்றிதழ்கள் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் 500 குடும்பத்தினருக்கு இந்து மலைக் குறவா் சான்றிதழ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த சமுதாய மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.