தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:05 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மயிலம் மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தவா் புருஷோத்தமன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவருக்கு விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 27,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தவா் ஜெயவேல்( 40). இவா், வீடு கட்டுவதற்கு நகர வடிவமைப்பு அனுமதி வழங்குவதற்காக விழுப்புரத்தைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 23-ஆம் தேதி கைதானாா். இவா்கள் இருவரும் அந்தந்த துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.