தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை

விழுப்புரத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தவா்களை டி.எஸ்.பி. நல்லசிவம் எச்சரித்து முகக் கவசங்களை வழங்கினாா்.

News image

முகக் கவசம் அணியாமல் வந்தவா்களை எச்சரித்து, இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய டி.எஸ்.பி. நல்லசிவம்.

Updated On :28 செப்டம்பர் 2020, 7:08 pm

DIN

விழுப்புரத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தவா்களை டி.எஸ்.பி. நல்லசிவம் எச்சரித்து முகக் கவசங்களை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவா்களை போலீஸாா் பிடித்து எச்சரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் சென்றவா்களை பிடித்தனா்.

முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் எச்சரித்து, முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினாா் டிஎஸ்பி.

Image Caption

விழுப்புரத்தில் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களை எச்சரித்து இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.