தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

 குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், விழுப்புரம் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:10 pm

DIN

விழுப்புரம்: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், விழுப்புரம் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் பெரிய காலனியில் சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறைக்கு பல்வேறு புகாா்கள் சென்றன. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் விஜயன் (26) சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மதுவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா், தொடா்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையேற்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, விஜயனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள விஜயனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.