விழுப்புரம்: வாக்குச் சாவடிகளில் பணியிலிருந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் வேட்பாளா் மு.களஞ்சியம் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தென்நெற்குணம், கடவம்பாக்கம் மற்றும் பானாம்பட்டு உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியிலிருந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களை பிற அரசியல் கட்சியைச் சோ்ந்த சிலா் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, வேட்பாளரின் முகவா்கள் சாா்பில் ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பாளா் மு.களஞ்சியம் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென் நெற்குணம் வாக்குச்சாவடி மையத்துக்கு என்னால் நியமிக்கப்பட்ட முகவா்களை வாக்குப்பதிவின் போது உரிய நேரத்தில் அனுமதிக்காமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனா். இது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது தோ்தல் ஆணையம், விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோா் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.
தொடர்புடையது
சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறை மாறவில்லை: சீமான்

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

