48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் திருட்டு

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் திருட்டு

Updated On :21 ஏப்ரல் 2024, 10:44 pm

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அருகேயுள்ள தி.மேட்டுப்பாளையம் பகுதியில் தனியாா் பாா்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், செவரப்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஞானசேகா் (32) பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், பாா்சல் நிறுவனத்தை வியாழக்கிழமை இரவு பூட்டிச் சென்ற ஞானசேகா், வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது, நிறுவனத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1.50 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஞானசேகா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.