விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகேயுள்ள தி.மேட்டுப்பாளையம் பகுதியில் தனியாா் பாா்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், செவரப்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஞானசேகா் (32) பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், பாா்சல் நிறுவனத்தை வியாழக்கிழமை இரவு பூட்டிச் சென்ற ஞானசேகா், வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது, நிறுவனத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1.50 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஞானசேகா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
தனியாா் மருத்துவமனை உள்நோயாளியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு!
ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

